Saturday, September 22, 2018

ரங்கசாமி போய் நாராயணசாமி வந்தும் திராவிடப் பேரவை இருட்டடிப்பு, புறக்கணிப்பு மாறவில்லை


காவிரி நீருக்காகத்  தமிழக அரசு போல புதுவை அரசியல் கட்சிகளை டெல்லிக்கு கூட்டிச் சென்று நடுவண் அரசை வலியுறுத்துக என்று சில  கட்சிகளுடன் சென்று கேட்டுக் கொண்ட பாவத்துக்காக , அந்தக் கோரிக்கையை  சட்டமன்றம் எதிரே மறியல் செய்து கைது ஆன மாபெரும் பாவத்துக்காக புதுவை முதல்வர் ந .அரங்கசாமி  புதுவை அரசு அழைப்பு அனுப்பும் கட்சிகளின் பட்டியலில் இருந்து திராவிடப் பேரவையை நீக்கிவிட்டார். 

கடந்த ஆண்டு  செயல்படும் பதிவு செய்யப்பட்ட  கட்சிகள் பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதன் மீது ஒரு தாசில்தார் என் வீட்டுக்கே வந்து விசாரணை நடத்தி தேர்தல் ஆணையத்துக்கும் அறிக்கை அனுப்பியும் இன்று வரை ஒரு கட்சிக்குரிய அழைப்பை அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு செய்தி விளம்பரத்  துறை அனுப்புவதில்லை. 

ரங்கசாமி போய் நாராயணசாமி வந்தும் திராவிடப் பேரவை இருட்டடிப்பு, புறக்கணிப்பு மாறவில்லை. இருவருமே தாகூர் கலைக்  கல்லூரியில் என்னுடைய  ஜூனியர்கள் .

எவர் இருட்டடித்தாலும் உதய  சூரியன் போல ஒவ்வொரு நாளும் உதிக்கும் திராவிடப் பேரவை .


No comments:

Post a Comment